இன்று உலக இடக்கை பழக்கமுடையோர் தினம்.
நாம் நமது அன்றாட வாழ்வில், இடக்கை பழக்கமுள்ளவர்களை பார்த்திருப்போம். அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13-ஆம் நாள் உலக இடதுகைப் பழக்கம் உடையோர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதல் முதலில் 1976-ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. இந்த நாளை, “பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம்” கொண்டாடி வருகிறது.
இந்த இடக்கை பழக்கம் உள்ளவர்கள் சமூகத்தில் சில சிரமமான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பழக்கமானது ஒருவருக்கு பிறப்பிலேயே ஏற்படுகிறது. பொதுவாக மூளை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை, மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் மூளையம் ஆகும்.
இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.
சில பெற்றோர்கள் இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை குழந்தைப் பருவத்திலேயே வலது கை பழக்கத்திற்கு மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த பழக்கத்தை மாற்ற முயற்சிக்கும் போது அவர்களின் பேச்சிலும் பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்று அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.
இந்த நாளானது, இடக்கை பழக்கமுள்ளவர்களை கௌரவிக்கும் நோக்கிலும், மனதளவில் அவர்களுக்கு ஏற்படும் தாக்கங்களை போக்கும் வண்ணமாகவும், இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர்.
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…
மத்திய பிரதேசம் : இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…