இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இரண்டு நாடுகளும் இணைந்து செயல் படும் ! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி !

Default Image

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடிக்கு நிகழ்ச்சி நடை  பெற்றது.இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி பேசினார்.அதில் அவர் பேசியதாவது, ” பிரதமர் மோடியின் செயல்பட்டால் இந்திய மிக பெரிய வளர்ச்சி பாதையில் செல்கிறது. அவர் மீது நம்பிக்கை வைத்து 60 கோடி  இந்தியர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள்.

மேலும் அவர் அமெரிக்க இந்திய உறவு முன்பை விட வலுவாக இருக்கிறது என்றும் அமெரிக்காவின் நம்பிக்கை உரிய நண்பனாக இந்தியா  விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் பல இந்திய நிறுவனங்களால் அமெரிக்காவில் உள்ள பலருக்கும் வேலை கிடைத்துள்ளது என்று வரு கூறினார். எரி சக்தி துறையில் முன்னணி நாடக விளங்கும் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவதை மகிழ்ச்சியுடன் இருக்கு கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் இஸ்லாமிய பயங்கர வாதத்தை ஒழிக்கவும் இருநாடுகளும் இணைந்து செயல்  பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சட்ட விரோதமாக வேற்று நாடுகளில் இருந்து குடியேறுபவர்களை தடுக்க வேண்டும் என்றும் எல்லை கடந்த பயங்கரவாதத்தை எதிர்க்கவும் ,ஒழிக்கவும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என அவர் கூறினார்.இவை அனைத்தையும் எனது நண்பன் மோடியுடன் இணைந்து செயல்படுத்துவேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 08052025
Central government orders OTT platforms
Pakistan issues security alert
S-400
Union minister Jaishankar
Union minister Rajnath singh say about Operation Sindoor