உக்ரைன் ரஷ்யா இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.இந்த பேச்சுவார்த்தை மூலம் தற்போது முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியிலும் எழுந்துள்ளது.
நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.குறிப்பாக, குடியிருப்பு மற்றும் பொதுமக்கள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துகிறது.இதனால்,உக்ரைன் குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.எனினும்,தங்கள் நாட்டை காக்க உக்ரைன் ராணுவத்தினரும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் உயிரைக் காப்பற்றிக் கொள்ள உக்ரைன் மக்கள் மற்றும் அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் உட்பட பிற நாட்டு மாணவர்களும் சுரங்க அறைகளில் தங்கியுள்ளனர்.எனினும்,உக்ரைன் மக்களில் பெரும்பாலானோர் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். அதே சமயம்,அங்குள்ள இந்தியர்களை விமானம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது.
இந்நிலையில்,உக்ரைன் -ரஷ்யா இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.முன்னதாக அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,தற்போது அதை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனைகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.இந்த நிலையில்,உக்ரைன் ரஷ்யா இடையே இன்று பெலாரஸ்-இல் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை தற்போது பெலாரஸ் அரசு மேற்கொண்டுள்ளது.
உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் இந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியிலும் எழுந்துள்ளது.
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…