தளபதி விஜய்யுடன் பிக்பாஸ் புகழ் வனிதாவின் மகன்.! வைராலாகும் புகைப்படங்கள் இதோ.!

Published by
Ragi

வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான விஜய் ஸ்ரீஹரி தளபதி விஜய்யுடன் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ‘சந்திரலேகா’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். சமீப காலங்களில் அவர் பல சர்ச்சைக்கு உள்ளாகிய போதிலும் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கைவிடாமல் சினிமாவில் மட்டுமில்லாமல் அவருடைய வாழ்க்கையிலும் பிடித்து நின்றார். இதனையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் – 3 இல் கலந்து கொண்டு அனைத்து போட்டியாளர்களையும் வறுத்து எடுத்து விட்டார் என்றே கூறலாம். அதன் மூலம் பிரபலமான வனிதா அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் டைட்டிலையும் தட்டி சென்றார். தற்பொழுது யூடியூப் சேனலை தொடங்கி பிஸியாக வலம் வரும் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொள்கிறார்.

இரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் வரும் ஜூன் 27ம் தேதி பீட்டர் பவுல் என்பவருடன் மூன்றாவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகிய இவருக்கு 2பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் வருங்கால கணவரான பீட்டர் பவுல் என்பவரது பெயரை கையில் டாட்டூ போட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய்யுடன் வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடந்த 1995ல் நம்பிராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். விஜய்யின் நல்ல நண்பரான வனிதாவின் வீட்டில் விஜய் ஸ்ரீஹரியின் முதல் பிறந்தநாளுக்கு தளபதி மற்றும் சங்கீதா வந்துள்ளனர். அப்போது குழந்தைகளுடன் விளையாடும் தளபதியின் புகைப்படங்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் வனிதா. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Published by
Ragi

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

10 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

11 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

11 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

12 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago