விஷாலின் சக்ரா படம் : 4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திவிட்டு படத்தை வெளியிடலாம்!

Published by
Rebekal

விஷாலின் சக்ரா படம் வெளியீடு 4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திய பின் தான் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிய ஆக்ஷன் படத்தில் நடிகர் விஷால் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்த படத்தால் 8 கோடியே 29 லட்சத்துக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டதால் நடிகர் விஷால் இந்த படத்திற்கான நஷ்ட ஈடை தான் திருப்பி தருவதாக உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அவர் இதற்கான வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், ட்ரெண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு கதையை இயக்குனர் ஆனந்த் என்பவர் படமாக்க ஒப்பந்தம் செய்துள்ளார். விஷால் விலகி சென்ற பின் வேறு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தனது கதையை விஷாலை வைத்து சக்ரா எனும் தலைப்பில் எடுத்துள்ளதாக ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.

தனது நிறுவனத்தின் அதே கதையை இயக்குனர் ஆனந்த் நடிகர் விஷாலை வைத்து படம் எடுத்து உள்ளதால், அந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 4 கோடிக்கு உத்தரவாதத்தை செலுத்தி முடித்த பின்பே விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

21 minutes ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

13 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

14 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

14 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

15 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

15 hours ago