தடைகள் விலகி வெற்றி கைகூட நாம் செல்ல வேண்டிய தலம் !

Default Image

நாம் நமது அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளையும் இன்னல்களையும் சந்தித்து வருகிறோம்.அந்த வகையில் நாம் அன்றாடம் சந்திக்கும் பல இன்னல்களை தவிர்க்க இறை வழிபாடு நமக்கு மிகவும் அவசியம் .

அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் பல தடைகளை நீங்கி தனம் பெருகி வாழ்க்கை சிறப்பாக அமைய எந்த கோவிலுக்கு செல்லலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

கடையத்திற்கு சென்றால் கவலைகள் அனைத்தும் நீங்கும் என்பார்கள். திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். அதில் இருந்து 20 கி.மீ தொலைவில் கடையம் உள்ளது. அங்கு அற்புதமாக குடிகொண்டிருப்பவர் வில்வன நாதர். அங்கு அம்பாளின் திருநாமம் ஸ்ரீ நித்ய கல்யாணி.

 

ஒரு காலத்தில் வில்வ வனமாக இருந்த இந்த இடத்தில தற்போது கோவில் கொண்டதால் சிவபெருமானுக்கு ஒரு கைப்பிடி அழுவு வில்வம் சார்த்தி வழிபட்டாலே நமது வாழ்வில் உள்ள துன்பங்கள் தீரும் இருப்பது இந்த கோவிலின் சிறப்பு.

அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ நித்ய கல்யாணி அம்பாளுக்கு புடவை சார்த்தி குங்குமத்தால் அபிஷேகம் செய்து மனதார வழிபட்டால் மணமாலை தந்து மாங்கல்யம் தருவார் என்பது இங்கு இருக்கும் மற்றோரு சிறப்பு. எனவே இந்த ஆலயத்திற்கு சென்று  நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பல தடைகளை நீங்கி வெற்றி காணுவோம்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai