பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக நிகர் ஜோஹர் என்ற பெண் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஆண்களையே சார்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள். அங்கு பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டாலும் அரசு வேலைகளிலும், ராணுவம் உள்ளிட்ட துறைகளிலும் அனுமதி இல்லை . தற்போது சில இடங்களில் பெண்களையும் அனைத்து துறைகளிலும் நியமனம் செய்து காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக நிகர் ஜோஹர் என்ற பெண்ணை நியமனம் செய்துள்ளனர்.
இந்த தகவலை பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் இயக்குநரான ஜெனரல் மேஜ் ஜென் பாபர் இப்திகார் ட்வீட் செய்துள்ளார். 1985-ல் ராவல்பிண்டியிலுள்ள ராணுவ மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற நிகர் ஜோஹர் இராணுவ மருத்துவ படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
அதன் பின்னர் 2017-ல் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதிவு உயர் செய்யப்பட்ட மூன்றாவது பெண் என்ற புகழை பெற்றார். தற்போது ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பதிவு உயர்வு பெற்றுள்ளார். நிகர் ஜோஹர் அவர்களின் தந்தை மற்றும் கணவர் ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…