நாகாலாந்தில் பரவும் சீன பெண் இயேசு வழிபாட்டு முறை – எச்சரிக்கும் போதகர்கள்!

Published by
Rebekal

சீனப் பெண் ஏசு வழிபாட்டு முறை நாகலாந்து மாநிலத்திலும் பரவ ஆரம்பித்துள்ளதால் மதபோதகர்கள் எச்சரித்து வருகின்றனர்.

சீனாவில் 1920 இல் நிறுவப்பட்ட பெண் இயேசுவை வணங்கும் வழிபாட்டு முறை ஒன்று தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சர்வவல்லமையுள்ள கடவுள் வழிபாட்டு முறை. இயேசு மரித்து உயிர்த்தெழுந்த போது பெண்ணாக எழுந்தார் என்ற கருத்துடன் கூடிய இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் சீனாவில் அந்த வழிபாட்டு முறை தற்பொழுது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சீனாவில் இந்த முறை தடை செய்யப்பட்டிருந்தாலும் சீனாவின் அருகே உள்ள மாநிலமான நாகலாந்தில் இந்த இயேசு பெண் வழிபாட்டு முறை பரவிவருகிறது.

இதைதொடர்ந்து நாகலாந்து பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் போதகர்கள் மற்றும் நிறுவனத்தில் உள்ள பலரும் சீனாவிலிருந்து வந்திருக்கக்கூடிய இந்த மின்னல் வழிபாட்டு முறை அல்லது சர்வவல்லமையுள்ள கடவுள் வழிபாட்டு முறை என்னும் தவறான உபதேசத்தில் இருந்து மக்களை மீட்கும்படியாக கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து பேசிய நாகலாந்தின் மதபோதகர் ஒருவர், சர்வவல்லமையுள்ள கடவுளின் ஆலயம் என அழைக்கப்படக்கூடிய இந்த வழிபாட்டு முறை குறித்து நான் மிகவும் ஆர்வத்துடன் எச்சரிக்கிறேன்.

இது தானாக உருவாக்கப்பட்ட ஒரு குழு. கேட்பதற்கும் பார்ப்பதற்கும் கவர்ச்சிகரமாக இருந்தாலும், இது தவறான செய்தி பரப்புகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நம்முடைய சபைகளை இத்தகைய தவறான மதத்தில் இருந்து பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய இளைஞர் அமைப்பு செயலாளர், கடந்த மே மாதம் தான் நாகலாந்தில் இந்த வழிபாட்டு முறை பின்பற்றப் படுகிறது என்பதை அறிந்துகொண்டோம். இது சீனாவிலிருந்தும் சீன மக்களிடம் இருந்து வந்திருந்தாலும் தற்பொழுது நாகலாந்தில் வட கிழக்கு மாவட்டங்களில் பலர் அதைப் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். சிலர் அதன் உண்மைத் தன்மை அறிந்து வெளியே வந்துவிட்டனர். சங்கங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் எங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

11 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago