unknown node
தஞ்சாவூர்: டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் செலவை அரசு ஏற்கும் என தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் 15 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட 44 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.