unknown node
கடலூர்: கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்ற விழாவை எம்.எல்.ஏ,க்கள் புறக்கணித்தனர். அமைச்சர் மீதுள்ள அதிருப்தி காரணமாக அவர் பங்கேற்கும் விழாக்களைப் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம், கலைச்செல்வன், முருகுமாறன், சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் புறக்கணித்தனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூரில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.