கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரயில் நிலையத்தில் கிடைத்த இலவச வை-பை வசதியைப் பயன்படுத்திக் கொண்ட கூலித் தொழிலாளி ஒருவர் கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி அரசுப் பணிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
வை-பை மூலம் இலவசமாக தேர்வுக்கான மாதிரி கேள்விகளையும் வழிகாட்டும் வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்ததாக கூறும் ஸ்ரீநாத், இலவச வை-பை வசதி தனது வாழ்க்கையையே மாற்றி விட்டதாக கூறுகிறார்.கடந்த 5 ஆண்டுகளாக ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவருக்கு இப்போது புதிய எதிர்காலம் வாசலை திறந்துள்ளது.