சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது..!

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்த மறுகணமே, சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. டிரம்பின் அறிவிப்பு,

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்த மறுகணமே, சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. டிரம்பின் அறிவிப்பு,  சிரியாவில் உள்ள ஈரான் படைகள் மீது பகை நாடான இஸ்ரேல் தாக்குதல் நடத்த வித்திட்டது.

நேற்று இரவு சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிஸ்வேயில் உள்ள ஈரான் ராணுவ தளத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் அறிவித்துள்ளதால் போர் பதற்றம் தொற்றிக் கொண்டது