ரணில் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ...!சட்டத்தின்படியே பிரதமரை மாற்றினேன் ...!இலங்கை அதிபர் சிறிசேனா

இந்நிலையில்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இலங்கை அதிபர் சிறிசேன விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் இலங்கையில் என்னை கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும்

இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படியே பிரதமரை மாற்றி உள்ளேன்  என்று இலங்கை அதிபர் சிறிசேனா பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.இலங்கையில் 2015 வருடம் அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி 3 வருட ஆட்சியை இலங்கையில் நடத்தி வந்தது.இந்த நிலையில்  திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார்.

unknown node

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது.இலங்கையில் பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற நிலையில், அதற்கான அரசாணையையும் மற்றும் ஏற்கனவே பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கே பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கான அரசாணையையும், அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டார்.அதை தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் வரும் நவம்பர் 16ம் தேதி வரை முடக்கப்படுவதாக, அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை, அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ரஜிதாசேன ரத்ன வெளியிட்டார்.

unknown node

குறிப்பாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பினார்.அதில் இலங்கை பாராளுமன்றத்தை நவம்பர் 16ஆம் தேதி வரை முடக்கிவைப்பது நாட்டில் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும். நாடாளுமன்றத்தை முடக்கும் முன் சபாநாயகருடன் ஆலோசித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதேபோல் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பதாக சபாநாயகர் அங்கீகாரம் அளித்தார்.

unknown node

இந்நிலையில்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இலங்கை அதிபர் சிறிசேன விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் இலங்கையில் என்னை கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருந்தது. கொல்ல சதி நடந்ததால் வேறு வழியின்றி ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டியதாயிற்று.ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ஏற்பட்டது. கூட்டாக முடிவு எடுக்கக் கூடாது என்பதில் ரணில் பிடிவாதமாக இருந்தார்.இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படியே பிரதமரை மாற்றியதாகவும் அதிபர் சிறிசேன விளக்கம் அளித்துள்ளார்.

ரணில் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ...!சட்டத்தின்படியே பிரதமரை மாற்றினேன் ...!இலங்கை அதிபர் சிறிசேனா