ஸ்மார்ட்போனில் உள்ள பிராசஸர் சாதனத்தில் உள்ள மற்ற பாகங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்து, சாதனம் சீராக வேலை செய்வதை உறுதி செய்யும். நவீன கால ஸ்மார்ட்போனில் உள்ள அதிகப்படியான அம்சங்கள் மற்றும் செயலிகள் நமக்கு பலவழிகளில் பயன்தருகின்றன.
இந்த செயலிகள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் மற்ற மென்பொருள்களுடன் இணைந்து வேலை செய்யும் பிராசஸரில் சிஸ்டம் ஆன் சிப் (System on Chip), சென்ட்ரல் பிராசஸிங் யூனிட் (CPU) மற்றும் கிராஃபிக்ஸ் பிராசஸிங் யூனிட் (GPU) உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போன் அதிவேகமாமகவும், அதிக திறன் கொண்டிருக்கவும்.
unknown nodeபிராசஸரை திறனுள்ளதாக உருவாக்க பல்வேறு புதுமைகள் மேறஅகொள்ளப்பட வேண்டும். இதில் ஒன்றாக சிபியு அல்லது கோர்களை அதிகப்படுத்தும் வழிமுறைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ரேம் (RAM) என்றால் என்ன? கடந்த சில ஆண்டுகளாக கோர்கள் அதிகப்படுத்தப்பட்டும், அளவில் சிறியதாகவும் மாற்றப்படுகின்றன. எத்தனை கோர்கள் இருக்கின்றன என்பதை பொருத்து ஸ்மார்ட்போன் வேகம் இருப்பதில்லை.
சில வழிகளில் குவாட்கோர் மற்றும் ஆக்டா கோர் வேலை செய்யும் விதங்களில் சில மாற்றங்கள் இருக்கும், இவை ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் விதம் மற்றும் அவை வேலை செய்வதால் இந்த நிலை உள்ளது. குவாட்கோர் சிப்களில் உள்ள கோர்கள் ஒன்றாக வேலை செய்து சில வழிமுறைகளை முடிக்கும். இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட பணி வேகமாகவும், அதிக திறமையாகவும் முடிக்கப்படுகிறது.
ஆக்டாகோர் சிப்களில் உள்ள கோர்கள் இரண்டு குவாட்கோர் பிராசஸர் செட்களாக இருக்கின்றன. இவற்றில் ஒன்று அதிவேகமாகவும், மற்றொன்று சற்றே வேகம் குறைவாகவும் இயங்கும். குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பணியும் இருவித கோர்களுக்கும் வழங்கப்படும். ஆக்டாகோர் பெயருக்கு சிறந்த மாற்றாக டூயல் ஆக்டாகோர் இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் உள்ள பிராசஸிங் யூனிட் பேட்டரியில் உள்ள மின்சக்தியை பயன்படுத்தி பல்வேறு பணிகளை மேற்கொளஅளும். அதிக கோர்கள் வழங்கப்படும் பட்சத்தில் அதிகளவு மின்சக்தி தேவைப்படும். இதுவே ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பேக்கப் அளவு மாறுகிறது.
ஆக்டாகோர் பிராசஸர் இதற்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. குறைந்த வேகமான கோர்கள் குறைந்த அளவு மின்திறன் பயன்படுத்தும் பணிகளையும், அதிவேகமான கோர்கள் அதிக திறன் கொண்ட பணிகளை தேர்வு செய்யும். இதனால் பேட்டரி திறமையாக பயன்படுத்தப்படுகிறது.
ஆக்டாகோர் சாதனத்தில் இருமடங்கு கோர்கள் இருப்பின் அது டூயல் கோர் சாதனத்தை விட வேகமானது என எடுத்து கொள்ள முடியாது. ஒரு பணியை செய்யும் போது இவை நான்கு கோர்களை மட்டுமே பயன்படுத்தும் என்பதால் ஆக்டா கோர் சாதனத்தை விட வேகமாக இருக்காது.