ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாராவின் 400 ரன்கள் என்ற உலக டெஸ்ட் சாதனையை முறியடிக்க 34 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 626/5 என்ற ஸ்கோரில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார்.இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏனெனில் முல்டருக்கு லாராவின் வரலாற்று சாதனையை […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி, ஜூலை 7, 2025 அன்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் தோனி, கிரிக்கெட் உலகில் தனது தலைமைத்துவத்திற்கும், அமைதியான புன்னகைக்கும் பெயர் பெற்றவர். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்கள். அவர் பிறந்த நாள் இன்று என்பதால் […]
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது. இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, திருப்பூர் தமிழன்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜாவின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு விளையாடிய திண்டுக்கல் […]
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டு போட்டி முடிவில் 1-1 என தொடரை சமன் செய்தது. இதன் மூலம் 58 ஆண்டுகால தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் முடிந்திருந்த எட்ஜ்பாஸ்டனின் பழைய பதிவை மாற்றியமைத்தது. இந்த போட்டியில், இந்தியாவுக்காக பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் […]
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில் (ஜூலை 5, 2025, லீட்ஸ்) 52 பந்துகளில் அபாரமான சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த 14 வயது இளம் வீரர், இந்த சதத்துடன் தனது திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தியதுடன், அடுத்த போட்டியில் இரட்டை சதம் (200 ரன்கள்) அடிக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது உத்வேக மூலமாக […]
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இந்த அபாரமான ஆட்டம் இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் என்ற மாபெரும் ஸ்கோருக்கு உயர்த்தியது. இதுகுறித்து இங்கிலாந்து உதவி பயிற்சியாளர் ஜீத்தன் படேல், ஜூலை 5, 2025 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாக பேசினார். “சுப்மன் கில் ஒரு மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவரைப் பார்த்து […]
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 587 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 64 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து இந்தியா அணி 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்கள் எடுத்திருந்தது, இதன் அடிப்படையில் அவர்களுக்கு 180 ரன்கள் […]
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால் (269) இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்துள்ளது. பதிலுக்கு இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து முதலில் தடுமாறினாலும், ஸ்மித் மற்றும் புரூக் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஒரு தலைவலியாக மாறிவிட்டனர். ஆம், ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் இடையே 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் உள்ளது. இருவரும் அற்புதமாக பேட்டிங் செய்கிறார்கள். […]
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று விளையாடிய கேப்டன் கில் 269 ரன்களை சேர்த்தார். அவருக்கு துணையாக ஜடேஜா(89), வாஷிங்டன் சுந்தர்(42) சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். வலுவான ஸ்கோரை முதல் இன்னிங்சில் இந்திய அணி எடுத்துள்ளது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து இங்கிலாந்து வீரர்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். ஆகாஷ் தீப் 3-வது ஓவரில், கடந்த டெஸ்டில் சதம் அடித்த டக்கெட்(0), […]
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் குவித்து இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் இந்தியா 587 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது, இதில் கில்லின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால், அவர் இந்த அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து, சுப்மன் கில் தனது தந்தை லக்ராஜ் சிங் கில் அழைத்து வாழ்த்தியதாகவும், ஆனால் முச்சதத்தை […]
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி “முழுமையான மாஸ்டர்கிளாஸ்” என்று பாராட்டியுள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை 77/3 என்ற நிலையில் 510 ரன்கள் பின்தங்கிய நிலைக்கு தள்ளியது. இந்த அளவுக்கு இந்திய சிறப்பான ரன்களை குவிக்க காரணமே கில்லின் இந்தப் புரட்சிகரமான 269 ரன்கள் தான். இந்த இரட்டை […]
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார். பர்மிங்காம் மைதானத்தில் கில் 311 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் கில்லின் முதல் இரட்டை சதமாகும். 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அவர் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். நிதானமாக விளையாடிய கில் இங்கிலாந்து அணியின் பத்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய கில் டெஸ்ட் அரங்கில் […]
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தேர்வு முடிவு குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் (எட்ஜ்பாஸ்டன், ஜூலை 2, 2025) உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. முன்னதாகவே, அவருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு கொடுக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. […]
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025) மாபெரும் சாதனை படைத்து அசத்தியுள்ளார். அது என்ன சாதனை என்றால், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சதம் அடித்த இரண்டாவது இந்திய கேப்டன் என்கிற வரலாறு சாதனை தான். இந்த அரிய சாதனையை முன்பு டான் பிராட்மன் (1938), கேரி சோபர்ஸ் (1966) மற்றும் முகமது அசாருதீன் (1990) போன்ற […]
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது. மதியம் 3 மணி அளவில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடந்த போட்டியில் பங்கேற்ற சாய் சுதர்ஷன், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி […]
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியின் தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்கும். அதே நேரத்தில், இங்கிலாந்து இதைப் பயன்படுத்திக் கொண்டு தொடரில் 2-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற முயற்சிக்கும். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். […]
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓய்வு எடுக்கலாம் என்ற தகவலுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். விஸ்டன் கிரிக்கெட் வீக்லி பாட்காஸ்டில் பேசிய புட்சர், இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ள நிலையில், அணியின் தேவைகளும் தொடரின் சூழலும் தனிப்பட்ட விருப்பங்களை விட முக்கியமானவை என்று கூறினார். “பும்ரா […]
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட் உலகின் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர்” என்று புகழ்ந்து பேசினார். 2025 ஜூன் 20 முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பண்ட் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் (134 மற்றும் 118) அடித்து அசத்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக (ஜூலை 2, எட்ஜ்பாஸ்டன்) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டோக்ஸ் […]
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மற்றும் அவர்களது மகளுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2025 ஜூலை 1 அன்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு, ஹசின் ஜஹான் தொடர்ந்த குடும்ப வன்முறை மற்றும் ஜீவனாம்ச வழக்கில் அவருக்கு ஆதரவாக வழங்கப்பட்டது. கடந்த 2018-இல் ஹசின் ஜஹான், ஷமி மீது குடும்ப வன்முறை, கொலை முயற்சி, மற்றும் பல பெண்களுடன் தொடர்பு […]
பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக நிறுவனம் (BESCOM) கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு (KSCA) முன்னர் உத்தரவிட்டிருந்தது. இதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், 2025 ஜூலை 1 அன்று மைதானத்திற்கு மின்சார விநியோகம் திடீரென துண்டிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, 2025 ஜூன் 4 அன்று மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் […]