தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் வலுவடைந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலில் 40-50 கீ.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ.8 தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, இந்திய கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:- […]
அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வடகிழக்கு பருவமழை முதலி கடலோர பகுதிகளிலும், பின்னர் மற்ற இடங்களிலும் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது.அந்த செய்தி அறிக்கையில் ,சென்னை , காஞ்சிபும் , திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை அதாவது 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது. இந்த மழை வருகின்ற 3ஆம் தேதி வரை தொடரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில் கிழக்கில் இருந்து வரும் காற்று கடலோர மாவட்டங்களில் நுழைந்துள்ளதால் வருகின்ற 2 மற்றும் 3 […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இன்று சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்தது. பொன்னேரி, செங்குன்றம், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இன்று சென்னை வானிலைமைய இயக்குனர் பாலசந்திரன் கூறும் போது தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்; […]
தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் முடிந்து விட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக கிழக்கு திசை காற்று வீசத் தொடங்கினாலும் அது இன்னும் வலுப்பெறவில்லை. இதனால் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மலை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தாமதமாகும் என்ற நிலையில் இன்னும் இரண்டு நாளில் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் நாகை தஞ்சாவூர், திருவாரூர், […]
வடகிழக்கு பருவமழை வருகிற 26-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிந்து விட்ட நிலையில், இனி வடகிழக்கு பருவ மழை தொடங்கும்இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி வருகிற 26-ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. வடக்கு அந்தமானில் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. மேலும் அது நகரும் திசையை பொறுத்து மழைக்கான வாய்ப்பு இருக்கும். தற்போது தென்மேற்கு வங்க […]
தேனி மாவட்டத்தி்ல் இடியுடன் கனமழை பெய்துள்ளது. தேனி மாவட்டத்தி்ல் இடியுடன் கனமழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தேனிமாவட்டத்தில் கொட்டி தீர்த்துள்ளது மழை.மேலும் தேனி அதன் சுற்றுவட்டார பகிதிகளான ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
தென்மேற்கு பருவமழை நாளையுடன் முடிவடைவதையடுத்து, 2 நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய தீபகற்பமானது தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரு பருவகாலங்களைக் கொண்டது. இந்த சமயத்தில் தான் நல்ல மழை பெய்யும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வாரத் தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்தது. செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம் உள்ளது. ஆனால் […]
சென்னையில் விடிய விடிய மழை பெய்துள்ளது.மேலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது.சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, மடிப்பாக்கம், மதுரவாயல், நங்கநல்லூரில் மழை பெய்துள்ளது. இந்நிலையில் சைதாப்பேட்டை, அசோக்நகர், நுங்கம்பாக்கம், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, வண்டலூர், தாம்பரம், பம்மல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. மழை குறித்து வானிலை மையம் மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு […]
அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் காற்றின் திசை மாறிய பிறகு, வரும் 15-ஆம் தேதி அளவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. DINASUVADU
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில், வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்த அதி தீவிர டிட்லி புயலானது தற்போது […]
டிட்லி’ புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள `டிட்லி’ புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே நாளை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புயலானது வங்கக் கடலில் ஓடிசா மாநிலம் கோபால்பூர் பகுதிக்கு 560 கி.மீ. தொலைவிலும், கலிங்கப்பட்டினத்திற்கு 510 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று நேற்று […]
தித்லி புயல் காரணமாக ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி உள்ளதால் ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தித்லி புயல் காரணமாக ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் உள்ள கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்துள்ளதால் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிககி விடுத்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக தெரிவித்தார். பாலசந்திரன் பேசியதாவது, “ லூபன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மேலும் வலுப்பெற்று தெற்கு ஓமன் கரையை நோக்கி நகரும். […]
நாகர்கோவில்: தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு நகர்ந்துள்ளது. ஓமனில் இருந்து 1360 கி.மீ கிழக்கு தென் கிழக்கு திசையிலும், ஏமனில் இருந்து 1270 கி.மீ தூரத்தில் கிழக்கு தென் கிழக்கு திசையிலும், லட்சத்தீவு பகுதியில் இருந்து 920 கி.மீ மேற்கு வடமேற்கு திசையிலும் நிலை கொண்டிருந்த நிலையில் இது ‘லூபான்’ புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் வரும் 12ம் தேதி வரை […]
அரபிக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சென்னை வானிலை மையம் “லூபன் ” என்று பெயரிட்டுள்ளனர். இந்த புயல் ஓமானில் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளனர். அடுத்த 2 நாட்களில் இந்த […]