தமிழகம் மற்றும் புதுசேரியில் கனமழைக்கு வாய்ப்பு! கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா கர்நாடக பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்கத்திலும் கோவை, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பாதிப்புகள்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா கர்நாடக பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்கத்திலும் கோவை, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பாதிப்புகள் அதிகமாக இருந்தது.

தற்போது வந்த வானிலை அறிவிப்பின் படி, வடமாநிலங்களில் நாளை முதல் மழையின் அளவானது குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகம் மற்றும் புதுசேரியில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘

இதன் காரணமாக அரபி கடலுக்குள் யாரும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.