வானிலை

தமிழக கடலோர பகுதிகளில் வரும் 30-ம் தேதி கனமழை…..இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழக கடலோர பகுதிகளில் வரும் 30-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாளை முதல் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.30-ம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள இந்திய வானிலை […]

#Weather 2 Min Read
Default Image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்…சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உட்பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து விட்டதாகவும் தற்போது குமரிக்கடல் முதல் தமிழகத்தின் உட்பகுதி வரை, வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மழைப்பொழிவானது, அடுத்த 3 நாட்களில் படிப்படியாக குறையும் என்றும் சென்னை மற்றும் புறநகர் […]

#Weather 3 Min Read
Default Image

காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை நீடிக்கும்….வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட கடலோர மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.கஜா புயல் கரையை கடந்த பிறகு உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய மழை சென்னையில் இடைவிடாமல் கொட்டிவருகிறது. இரவுபகலாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் சென்னையில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, மேலும் 2 நாட்களுக்கு […]

#Weather 2 Min Read
Default Image

திருப்பதி குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை…பக்தர்களுக்கு சிரமம்..!!

திருப்பதி திருமலையில் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன்கூடிய மழை பெய்து வருவதால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.  வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் குளிர்ந்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. விடாமல் பெய்துவரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள், குழந்தைகள் குளிர் தாங்கமுடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். www.dinasuvadu.com

#Weather 2 Min Read
Default Image

அடுத்த ரெட் அலர்ட் வட தமிழகத்துக்கு…பீதியில் தமிழகம்….!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், […]

tamilnews 3 Min Read
Default Image

டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த ஆபத்து….7 மாவட்டங்களில் கனமழை….சென்னை வானிலை மையம் …!!

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறி உள்ளதாவது:- வங்கக் கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டா பகுதி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.இதே போல் உள்மாவட்டங்களில் மழை பெய்யயும். நாளை மற்றும் நாளை மறுநாள்  தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.கடலூர், நாகை, திருவாரூர், சிவகங்கை,  தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு […]

#Weather 2 Min Read
Default Image

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள்…!!

கஜா கரையை கடந்த சூழலில் தற்போது  புயல் சேத விவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படுக் கொண்டு இருக்கின்றது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறியது.  தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு  கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை – வேதாரண்யம் இடையே இன்று காலை கரையைக் கடந்தது. புயல் கரையைக்கடக்கும் போது நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் […]

#Weather 6 Min Read
Default Image

கரையை கடந்த கஜா…11 மணிக்கு காற்றழுத்ததாழ்வாக மாறும்…வானிலை ஆய்வு  மையம்…!!

கஜா புயல்  தற்போது புயலாக மாறி கரையை கடந்துள்ளதாக  வானிலை ஆய்வு  மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில் , இரவு 12.30 மணிக்கு கஜ புயல் நாகை வேதாரண்யம் இடையே கரையை கடக்க தொடங்கிய போது தீவிர புயலாக இருந்தது.அதன் கன்பகுதி கரையை கடந்த 12.30 முதல் 2.30 மணி வரை தீவிர புயலாகவே கரையை கடந்தது.சரியாக 5.30 மணிக்கு கஜா புயல் மேற்குதிசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. கஜா புயல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் […]

#Weather 2 Min Read
Default Image

கரையை கடந்தது கஜா….!!

நாகை வேதாரண்யம் இடையே இரவு 12.30 மணிக்கு கஜா புயல் கரையை கடக்க தொடங்கியது.இந்நிலையில் தற்போது கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்துள்ளதக்க வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.அதிராம்பட்டினத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. www.dinasuvadu.com

#Weather 1 Min Read
Default Image
Default Image

கஜா புயல் அட்டகாசம்…..சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு…!!

கஜா புயலில் தாக்கத்தால் சென்னை தவிர தமிழகத்தின் பிற அரசு சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்ப்பட்டுள்ளன என்று டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இன்றும் , நாளையும் நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது  டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம்.அதே போல காந்தி கிராம பல்கலைத்தேர்வுகளையும்  ஒத்திவைப்பாதக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.சீர்மிகு  சட்ட கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறுமென்று சீர்மிகு  சட்ட கல்லூரி அறிவித்துள்ளது. www.dinasuvadu.com 

GajaCyclone 2 Min Read
Default Image

வலு குறைந்தது கஜா…புயலாக மாறி கரையை கடக்கும்…இந்திய வானிலை ஆய்வு மையம்…!!

கஜா புயல் கரையை கடந்து வரும் சூழலில் தற்போது கஜா புயல் தீவிர புயலாக இருந்து தற்போது வலு குறைந்து புயலாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆதிரம்பட்டினத்தின் மேற்கே 20 கிலோமீட்டரில் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயலின் மையம்  நிலப்பகுதிக்குள் புயலின் நகர்ந்து வருகிறது.இதை தொடர்ந்து மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.dinasuvadu.com 

#Weather 2 Min Read
Default Image

கஜா புயலால் கடலூரில் 2 பேர் உயிரிழப்பு….!!

கஜா புயலால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கஜா புயல் தற்போது கரையை கடந்து வருகிஉற்றது .இந்நிலையில் கடலூர் வேம்பூர்ரில் சுவர் இடிந்து விழுந்து ஒருவரும் குறிஞ்சிபாடியில் மின்சாரம் தாக்கி ஒருவரும் பலியாகியுள்ளனர்.தற்போது கஜா புயல் கரையை கடக்கும் சூழலில் பல மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. www.dinasuvadu.com

#Weather 1 Min Read
Default Image

கஜா புயல்…மக்கள் முன்னெச்சரிக்கை….விழிப்புணர்வு வீடியோ…!!

தமிழகத்தில் கஜா புயல் இன்று இரவு  8 மணிக்கு கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மக்கள் புயல் , மழை மற்றும் வெள்ளம் போன்ற நேரத்தில் மக்கள் எந்த மாதிரி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டுமென்று தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. www.dinasuvadu.com 

#ADMK 1 Min Read
Default Image

கஜா-வின் ஆட்டம் ஆரம்பம்…புதுச்சேரியில் கடல் சீற்றம்…சுற்றுலாபயணிகள் வெளியேற காவல்துறை அறிவுரை…!!

புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலாபயணிகள் வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கஜா புயல் தற்போது 290 கிமீ தொலைவில் சென்னைக்கு கிழக்கேயும், நாகையிலிருந்து 290 கிமீ தொலைவில் வடகிழக்கிலும், காரைக்காலுக்கு கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.அதேபோல் கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 25 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என்றும்  8 மணிக்கு கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் கடல் அதிக […]

#Weather 3 Min Read
Default Image

கஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை….!!

கஜா புயல் காரணமாக தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது  அதிகாலை 5.30 மணி அளவில் மணிக்கு 5 கிலோ மீட்டராக இருந்த வேகம் காலை 8.30 மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது. சென்னையில் இருந்து 740 கி.மீ தொலைவில் கஜா புயல் தற்போது மையம் கொண்டுள்ளது.  நாகையில் இருந்து 830 கி.மீ தொலைவில் கஜா புயல் […]

#Weather 3 Min Read
Default Image

நகர்கிறது கஜா புயல்…. 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது…..இந்திய வானிலை ஆய்வு மையம்…!!

கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கஜா புயலானது குறைந்த வேகத்தில் நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் மணிக்கு 5 […]

#Weather 3 Min Read
Default Image

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…..! இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை..!!

கஜா புயல் காரணமாக நவம்பர் 15-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.ஆழ்ந்த காற்றாழுத்த தாழ்வுமண்டலம் கஜா புயலாக மாறியுள்ளது.இன்னும் இரண்டு நாட்களில் கஜா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 90 […]

#Weather 2 Min Read
Default Image

உருவானதாம்” கஜா புயல்”வட தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை..!!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘கஜா’ புயலாக  உருவாகியுள்ளது.இந்த கஜா புயல் வடமேற்கு திசையைநோக்கி நகர்ந்து வரும் கஜா புயல், 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இந்த கஜா புயலால் வட தமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

#Cyclone 2 Min Read
Default Image

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு….சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் மட்டும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து உள்ளது. இந்நிலையில் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் நாளை மழை பெய்யும்.  ஓரிரு இடங்களில் (நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில்) கனமழை பெய்யும். என்று சென்னை வானிலை ஆய்வு […]

Chennai weather 3 Min Read
Default Image