14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Rain

இன்று காலை வரையில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த திடீர் மழை ஏற்பட்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த மழை காரணமாக நேற்று ஆறு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. தற்போது மழை அளவு குறைந்து உள்ளதால் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். திருப்பத்தூர் , திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை தொடர்வதால் அந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியான தகவலின் படி, தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று காலை வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அதில், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies