வாட்ஸ் அப்பில் ஆபாசமான பதிவுகளை பரிமாறிக்கொண்ட இரண்டு மாணவர்கள்!பள்ளியில் புகார் அளித்த பெற்றோர்கள்!பள்ளிக்கு செல்ல நடுங்கும் மாணவிகள்!

Default Image
  • வாட்ஸ் அப்பில் ஆபாசமான பதிவுகளை பரிமாறிக்கொண்ட மாணவர்களை குறித்து பெற்றோர்களே பள்ளியில் புகார் அளித்துள்ளனர்.
  • பள்ளிக்கு வர மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.

மும்பையில் உள்ள இன்டர்நேஷனல் போர்ட் பள்ளியில் 13 மற்றும் 14 வயது பாதிப்பு தக்க இரு மாணவர்கள் படித்து வருகின்றன.இந்த மாணவர்களின் வீட்டில் அவர்களது பெற்றோர் செல்போனை பயன்படுத்தும் வாய்ப்பை அளித்துள்ளனர்.

ஆனால் அந்த மாணவர்கள் அதை தவறுதலாக பயன்படுத்தி கொண்டு வாட்ஸ் அப்பில் ஆபாசமான வெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.இதனை கண்டறிந்த அந்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இதன் காரணமாக பள்ளியில் புகார் அளித்துள்ளனர்.அந்த மாணவர்களில் ஒருவர் வகுப்பு தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் அவர்கள் தனது வகுப்பில் உள்ள மாணவி ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ய வேண்டும் என்று பேசி வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் பல வந்தமான கூட்டுபலாத்காரத்தை தூண்டும் வார்த்தைகளை பல மாணவிகளை குறிப்பிட்டு தங்கள் வாட்ஸ் அப்பில் பதிவுகளை பரிமாறி வந்துள்ளனர்.பின்னர் அந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் காரணமாக அப்பள்ளியின் மாணவிகள் பள்ளிக்கு வர பயப்படுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இந்த சம்பவத்தால் பெற்றோர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்