விருதுநகரில் டி.எஸ்.பிக்கு அரிவாள் வெட்டு! இருவர் கைது! மேலும் இருவர் தலைமறைவு!

Default Image
  • விருதுநகரில் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி வெங்கடேசனை  ஒன்றிய அலுவலகத்தில் உட்புகுந்து, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியது.
  • இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 நபர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தமிழழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்று வந்த வேளையில் .அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி வெங்கடேசனை  ஒன்றிய அலுவலகத்தில் உட்புகுந்து, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு தாக்குதல் நடத்தி அரிவாளால் வெட்டி விட்டு சென்று விட்டனர்.

மேலும் அவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றனர். அதனை அடுத்து டிஎஸ்பி வெங்கடேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரில் 2 நபர்களை போலீசார் பிடித்துள்ளனர். மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai