பெருநகர ஏற்றுமதி பாதிப்பு.! காய்கறிகளின் தேக்கம்.! விலை வீழ்ச்சியில் மதுரை காய்கறி சந்தை.!

Default Image

தற்போது எந்த பெருநகரத்திற்கும்  மதுரையிலிருந்து அதிகமாக காய்கறிகளை ஏற்றுமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், காய்கறிகள் அதிகமாக தேக்கமடையும் சூழல் உருவாகியுள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சமூக விலகல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையும் 14 இடங்களுக்கு காய்கறிகள் பிரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக கடைகள் அமைக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் காய்கறிகளின் விலை கடும் உயர்வில் இருந்துவந்தது. 

ஆனால், தற்போது எந்த பெருநகரத்திற்கும்  மதுரையிலிருந்து காய்கறிகளை ஏற்றுமதி செய்யமுடியாத நிலை. இதனால் காய்கறிகள் அதிகமாக மதுரை மார்க்கெட்டில் தேக்கமடைகின்றனவாம் இதனால், காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளதாம். மேலும், காய்கறிகள் அதிகமாக இருப்பதால் தேக்கம் அடைந்து வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai