சென்னையில் 100 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று.!

Default Image

சென்னையில் 100 காவல்துறையினருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று மட்டுமே 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை 8,002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று மட்டுமே 538 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில்  மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவர்களுக்கு அவ்வப்போது தொற்று உறுதியாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 2 துணை ஆணையர்கள், ஒரு உதவி ஆணையர் உள்பட 100 காவல்துறையினருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai