ஆர்சிபி கொண்டாட்டத்தில் சோகம்.., பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.!
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்த சிறு குழந்தை ஒன்றும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளது, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 தாண்டியது.

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், இன்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), ஆர்சிபி அணிக்காக மைதானத்திற்குள் ஒரு சிறப்பு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
இறுதியில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் பெரும் துயரமாக மாறிவிட்டது. இதனை காண ஆர்சிபி ரசிகர்கள் எம். சின்னசாமி மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இதில், 4 பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்ததுடன், காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வளவுக்கு நடுவிலும் மைத்தனத்திற்குள் ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடந்து வருகிறது.
பெங்களுரூவில் ஆர் சி பி வெற்றி பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடுகிறவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கிறார்கள்.#RCBCelebration #Bengaluru #RCB pic.twitter.com/7SKxDFxVMq
— Barakath Ali (@sambarakathali) June 4, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!
June 6, 2025
அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
June 6, 2025