“நல்ல நடிகன்னு மக்கள் சொல்லட்டும்”…கண்கலங்கி அழுத விஜயகாந்த் மகன்கள்!
படைத்தலைவன் இன்று வெளியாகியுள்ள நிலையில், கேப்டனை நினைத்து விஜயகாந்தின் இரண்டு மகன்களும் கண்கலங்கி அழுதுள்ளனர்.

சென்னை : விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று (ஜூன் 13, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீடு விஜயகாந்தின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்துள்ளது. ஏனென்றால், விஜயகாந்த் இறந்தபிறகு அவருடைய மகன் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம்.
இப்படத்தில் விஜயகாந்தின் AI மூலமான தோற்றம் இடம்பெற்றுள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உணர்வுபூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் வரும் காட்சியை பார்த்து கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்கிற வகையில், அவருடைய காட்சிகள் இருந்தது.
தேமுதிக தொண்டர்கள் திரையரங்குகளில் மொட்டை அடித்து, படத்தை வெளியீட்டை பெரிய அளவில் கொண்டாடியுள்ளனர். இது விஜயகாந்தின் பட வெளியீடு போன்ற உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் பலரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு மக்களும் பாசிட்டிவான விமர்சனங்களை தான் கூறி வருகிறார்கள்.
இப்படியான சூழலில், விஜயகாந்த் மகன்கள் மிகவும் எமோஷனலாகி பட வெளியீடு குறித்து பேசியுள்ளனர். சென்னையில் படம் பார்க்க வந்த சண்முக பாண்டியன் முதலில் மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்துவிட்டு பேசவே முடியாத அளவிற்கு எமோஷனலாகி அழுதார். அதன்பிறகு விஜய் பிரபாகரன் படம் பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும். கேப்டனுக்கு அடுத்ததாக சண்முக பாண்டியன் சினிமாவிற்குள் வந்திருக்கிறார்.
கேப்டன் உயிரோடு இருந்த சமயத்தில் அவருக்கு உடல்நலக்குறைபாடு இருந்த போது எனக்கு சினிமாவே தேவையில்லை அப்பாவை முதலில் பார்த்துக்கொள்ளவேண்டும் என கூடவே இருந்து சண்முக பாண்டியன் பார்த்துக்கொண்டார். ஆனால், கேப்டனை காப்பாற்ற முடியவில்லை” என கதறி அழுதுகொண்டார். உடனே அங்கிருந்தவர்கள் அழுக கூடாது என ஆறுதல் தெரிவித்தனர். பிறகு பேசிய அவர் கேப்டன் உங்கள் சொத்து அதைப்போல தான் நாங்களும் உங்கள் சொத்து சண்முக பாண்டியனை கொண்டாடுங்கள்.நல்ல நடிகன் என்று அவரை மக்கள் சொல்லட்டும் ” எனவும் உருக்கமாக விஜய் பிரபாகரன் பேசினார்.