பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 41.68 புள்ளிகள் அதிகரித்து 60,407 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,829 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த வாரத்தில் சரிவில் வர்த்தககமாகிவந்த பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 60,315 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 106.48 புள்ளிகள் அல்லது 0.18% என உயர்ந்து 60,407 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 16.05 புள்ளிகள் அல்லது 0.090% உயர்ந்து 17,829 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,300 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,813 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி லிமிடெட், டாடா மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.