மதுரை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் ஆய்வு

கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினர்.அடிக்கல் நட்டு ஆறு மாதம் ஆகியும் மருத்துவமனை கட்டுவதற்க்கான எந்த வேலையும் நடைபெற நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதில்,மருத்துவமனை கட்ட மாநில அரசானது எந்த இடத்தையும் ஒதுக்கவில்லை என்றும் அதனால் தாமதமாகிறது என்ற தகவலை மத்திய அரசு கூறியது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் ஜப்பானிய நிதிக்குழு […]

#Madurai 2 Min Read
Default Image

" உலகபுகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் "கோவிலின் 150 கோடி சொத்து.!அறநிலைத்துறை கண்ணில் மண்ணை தூவி அதிகாரி துணையோடு அபகரிப்பு..!

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 150 கோடி மதிப்பிலான  நிலத்தை தனிநபர் அதிகாரிகளின் துணையோடு அபகரித்து உள்ளார் என்று புகார் எழுந்து உள்ளது. அறநிலை கட்டுப்பாட்டில் இருந்து வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அபகரிக்கபட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமாக மாவட்டம் முழுவதும் பல கோடிக்காணக்கான சொத்துகள் உள்ளது.இதில் மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள 150 கோடி மதிப்பிலான  14 ஏக்கர் நிலமும் அடங்கும்.இதில் 4 ஏக்கர்  நிலத்தை நிர்வாகத்தின் […]

செய்திகள் 6 Min Read
Default Image

நேசமணிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்த ஐ.டி ஊழியர்கள்!

உலகம் முழுவதும் pray for nesamani என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. முகநூலில் சுத்தியல் பற்றி ஒருவர் கேட்ட கேள்விக்கு, ப்ரண்ட்ஸ் பட நிசோயை கமெண்ட் செய்த்தால் தான் இது இவ்வளவு ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், மதுரையிலுள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி விரைவில் நேசமணி குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தன செய்வது போல நகைச்சுவையாக சித்தரித்துள்ளனர்.

tamilnews 1 Min Read
Default Image

மதுரையில் சிபிஐஎம் சு.வெங்கடேசன் முன்னிலை

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக கணிசமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போது மதுரையில் சிபிஐஎம் சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார்

#Politics 2 Min Read
Default Image

போதையில் மதுரை ரயிலை தனது பைக்கால் நிறுத்திய வாலிபர்!

மதுரையிலி இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலை தண்டவாளத்தில் பைக்கை குறுக்கே நிறுத்தி ரயிலை மறித்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று காலை பயணிகள் ரயில் மதுரையிலிலுருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, சிலைமானை அடுத்த மேம்பாலத்தை தண்டி சென்றபோது, ஒரு போதை வாலிபர் தனது இருசக்கர வாகனத்தால் தண்டவாளத்தை கடக்க நினைக்கையில் இடையில் மாட்டிக்கொண்டார். இதனை கவனித்த இன்ஜின் ட்ரைவர் சுதாரித்து கொண்டு ரயிலை நிறுத்தி ரயில்வே ஊழியருடன் சேர்ந்து வாகனத்தை தண்டவாளத்திலிருந்து […]

#Madurai 3 Min Read
Default Image

இரண்டு ரயில் ஒரே தண்டவாளம்! மதுரை திருமங்களம் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி பயணிகள் ரயில் தமதமாக திருமங்களம் வந்தடைந்தது. இதனால் திருமங்களத்தில் இருந்து உடனடியாக ரயில் புறப்பட சிக்னல் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் திருமங்களத்தை நோக்கி.மற்றொரு ரயிலும் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் பாதை ஒரு வழி பாதை என்பதால் இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்துவிட்டன. பிறகு சுதாரித்த அதிகாரிகள் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு நேருக்கு நேராக இரண்டு ரயில்கள் மோதவிருந்த பெரும்.விபத்து தவிரக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயணிகள் இந்த சம்பவம் […]

#Madurai 2 Min Read
Default Image

மதுரை அரசு மருத்துவமனையில் மின்சாரதட்டுபாட்டால் மூன்று பேர் பலி!

நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த பழை பெய்தது. கோடை வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது. இருந்தாலும், மதுரை அரசு மருத்துவமனையில் இந்த கன மழை சோகத்தை கொடுத்துள்ளது. நேற்று மதுரையில் அரசு மருத்துவமனையில், நேற்று கனமழை பெய்த காரணத்தால் மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக அரசு மருத்துவமனயில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவிசந்திரன், மல்லிகா, பழனியம்மாள் ஆகிய மூவரும் மூச்சித்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற தகவல் […]

madurai govt hospital careless 2 Min Read
Default Image

எங்கு படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல…. எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம்…. அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்….

இன்றைய பகட்டான மனித வாழ்வில் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்கவைப்பதை கௌரவ குறைவாகவும் அரசு பள்ளிகளின் நிலை காரணமாகவும் படிக்கவைப்பதில்லை.ஆனால் தற்போது அந்த நிலையை அரசு பள்ளி மாணவர்களே சரிசெய்து தங்களும் யாருக்கும் சளைத்தவரில்லை என்பதனை சுட்டிக்கட்டும் வாகையில் மாவட்ட அளவிலான  ஏற்கனவே நடந்த சதுரங்க போட்டியில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் முதல் இரண்டு இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். மதுரை மாவட்டம் விளாச்சேரியில் உள்ள இந்தியன் 3சி […]

4 Min Read
Default Image

ஜாடிக்கு ஏற்ற மூடி, மூடிக்கு ஏற்ற ஜாடி என்பது போல மோடிக்கு ஏற்ற எடப்பாடி : மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் அவர்கள் மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 22 சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளும் 23–ந் தேதி தெரிந்து விடும். அன்று மோடி வீட்டுக்கு போவது போல, எடப்பாடி பழனிசாமியும் வீட்டுக்கு போய் விடுவார் என்றும், ஜாடிக்கு ஏற்ற […]

tamilnews 2 Min Read
Default Image

நடு ரோட்டில் கல்லை வைத்து நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம கும்பல்

மதுரையை சார்ந்த திருநகர் பாண்டியன் நகரை சார்ந்த குமரகுருபரன் மகன் பாஸ்கரன். இவர் கே.கேநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த23-ம் தேதி தனது பணியை முடித்து விட்டு இரவு 12மணிக்கு தனது வீட்டிற்கு மோட்டர் வாகனத்தில் வந்து கொண்டியிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டில் கிடந்த கல் மீது மோதி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.காயமடைந்த பாஸ்கரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி செய்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன் […]

news 4 Min Read
Default Image

மதுரை மத்திய சிறையில் பதற்றம்! கைதிகள் கட்டடத்தின் மீது ஏறி கைதிகள் போராட்டம்!

மதுரை மத்திய சிறையில், கைதிகள் கட்டத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையில் உள்ள கைதிகளை காவல்துறையினர் துன்புறுத்துவதாகக் கூறி, தங்களது சட்டைகளை களைந்து கட்டத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கைதிகள் காவலர்கள் மீது கற்களைக் கொண்டு எரிவதால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

tamilnews 1 Min Read
Default Image

மதுரையில் பரபரப்பு, திமுக நிர்வாகி வெட்டிக்கொலை!

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும், மக்களவை தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை கீரைத்துறை சிந்தாமணி சாலையில், திமுக  செயலர் எம்.எஸ்.பாண்டியன் அவர்களை மர்ம நபர்கள் வழிமறித்து, வெட்டி கொலை செய்தனர். மேலும், இவரை கொலை செய்த மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

#DMK 2 Min Read
Default Image

மதுரையில் சித்திரை நிலையில் டிஜிபி ஆலோசனை

மதுரையில்  ஏப்ரல் 18-ம் சித்திரை திருவிழா நடைபெறவுள்ள நிலையில், டிஜிபி அசுதோஷ் சுக்லா தலைமையில் காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இக்கூட்டத்தில், தேர்தலின் போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடக்கிறது.

#Politics 1 Min Read
Default Image

நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகாசி சுகாதார அதிகாரியின் இடமாறுதல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

#Madurai 1 Min Read
Default Image

கொள்கை அல்ல, கொள்ளை மட்டுமே நோக்கம் : அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. அரசு சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், வெற்றி பெற போவதில்லை என்று தெரிந்தும் காங்கிரசும், தி.மு.க.வும் பொய்யுரைகளை அவிழ்த்து விடுகின்றனர் என்றும், கொள்கைக்காக காங்கிரசும், தி.மு.க.வும் இணையவில்லை. கொள்ளை […]

#ADMK 2 Min Read
Default Image

நடுவானில் பறந்த விமானத்தில் போராட்டம்!8 பேர் கைது

வானில் பறந்த விமானத்தில் கோஷங்களை எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று  இண்டிகோ விமானம் ஒன்று சென்னையில் இருந்து மதுரை நோக்கி  புறப்பட்டு சென்றது.விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது அதில் பயணம் செய்த சிலர் திடீரென்று எழுந்து  நின்றனர். அவர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினார்கள்.அதில்  மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வானில் பறந்த விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் விமான ஊழியர்கள் விமான நிலையங்களுக்கு தகவல் […]

flight 3 Min Read
Default Image

சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. தமிழக அரசின் முடிவை கேட்ட பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அடுத்த மாதம் 11-ம் தேதியில் இருந்து மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில்  18 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 18 -ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள அதே நாளில் தான் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது.இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் […]

#Politics 3 Min Read
Default Image

அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகள்….. மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….

இன்று உலகெங்கும் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய் இந்தியா, தமிழகத்தில் உள்ள நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து  பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது. இன்று உலகெங்கும் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். எங்கு பார்த்தாலும், மருத்துவமனையில் இருக்கும் நோய்களில் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க திட்டம் உள்ளதா? என உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை நீதிபதிகள் […]

cenral goverment 3 Min Read
Default Image

சித்திரை திருவிழா நடைபெறும் பகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் -மதுரை ஆட்சியர்

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் பகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்துளளார்.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் […]

#Politics 4 Min Read
Default Image

மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்!!அனைத்து கட்சிகள் கோரிக்கை!!மதுரை ஆட்சியர்

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரையில் மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மக்களவை  தேர்தல் தேதி நேற்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.அது போல் நேற்று  அந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.அதில் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான […]

#ADMK 6 Min Read
Default Image