மீனாட்சியம்மன் கோவிலின் பாதுகாப்பு கருதி மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில்கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை . தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி 40 ஆண்டுகளுக்குப் பின்பு மாற்றுத்திறனாளிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றுத்திறனாளி பக்தர்கள் கோவிலின் நுழைவு வாயில் வரை தனது சக்கர நாற்காலியுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி மாற்றுத்திறனாளிகள் தங்களை கோவிலின் நுழைவு வாயில் வரை அனுமதிக்கலாம் என விவரங்களை காவல்துறையினரிடம் காட்டி அதில் கூறியுள்ள விவரங்களை […]
புல்வாமா தாக்குதலில் இறந்த தூத்துக்குடி சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாத தாக்குதலில் கயத்தாறு அருகே சவலாபேரி கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்ரமணியன் (27) உயிரிழந்துள்ளார்.அதேபோல் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்துள்ளார்.தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் […]
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, நான்கு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வைகை பூர்வீக பாசனத்திற்காக வைகை அணை இன்று திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்களுக்கு 184 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற உள்ளன. இதன்மூலம், இரண்டாம் போக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ள இடத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். துரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது தென் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சியால் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 750 படுக்கை வசதிகள், 100 மருத்துவ படிப்பிற்கான இடங்களும் ஏற்படுத்தப்பட உள்ளன. […]
மதுரை ரயில் நிலையத்தில் ரூ.9½ லட்சம் செலவில் கொடிக்கம்பம் பொருத்தப்பட உள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் ரூ.9½ லட்சம் செலவில் கொடிக்கம்பம் பொருத்தப்பட உள்ளது. இந்த கொடிக்கம்பம் 100 அடி உயரம் கொண்டது. 2 டன் எடை கொண்டது. இதில் பறக்க விடப்படும் தேசிய கொடியானது வினைல் பாலிஸ்டர் துணியால் செய்யப்பட்டுள்ளது.அதன் நீளம் 30 அடியும், உயரம் […]
குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய புலனாய்வுத் துறை அறிவுறுத்தலின்படி மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு காரணமாக விமான நிலையத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு வருகின்ற 31 ஆம் தேதி வரை […]
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் மூடப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் நவீன மயமாக்கப்படவுள்ளது. எனவே முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை தொடக்கி அடிக்கல் நாட்டி வைத்தார். மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது. நான்கு தலைமுறையாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. தற்போது இந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது. மேலும் அப்பகுதியில் இயக்கி வரும் கடைகளும் அகற்ற படவுள்ளது. இதனால் அப்பகுதி கடைகாரர்கள் பெரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வெட்டு அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்காக தமிழகமே பொங்கியெழுந்து போராட்டக்களத்தில் நின்று தமிழரின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டை மீட்டெடுத்துள்ளது. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நினைவாக கல்வெட்டு அமைக்கப்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மேலும், நினைவு கல்வெட்டு அமைக்க முதல்வருக்கு பரிந்துரை செய்யப்படும் என அலங்காநல்லூரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியில் தெரிவித்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் குவிந்துள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர்கள் மிக உற்சாகமாக கலந்து கொண்டனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான முதல் பரிசாக மேலூர் மலம்பட்டியை சேர்ந்த உரிமையாளர் பிரபுவுக்கு கார் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக 2வது பரிசு பூவந்தியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, 3வது பரிசு மதுரை கே.கே.நகரை சேர்ந்த ப்ரியா ராஜசேகரன் என்பவரது காளைக்கு வழங்கப்பட்டது.
மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில், 49 பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மிக கோலாகலமாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காளையர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்குவதில் மிக உற்சாகமாக கலந்து கொண்டனர். இந்நிலையில், காளைகள் முட்டியதில், 49 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7-வது சுற்று நிறைவடைந்து இறுதிச்சுற்று நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் அவனியாபுர ஜல்லிக்கட்டில் இதுவரை 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டி மிக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் மற்றும் பார்வையாளர் காயம் அடைந்துளளனர். தற்போது இதுவரை 5 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது . மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியுள்ளது . இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 636 காளைகள் மற்றும் 500 மாடுபுடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர் . இந்நிலையில் , வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்குவதற்கு மாடுபுடி வீரர்கள் உற்சாகமாக உள்ளனர் .
மதுரை அலங்காநல்லூரில் மத்திய விலங்குகள் நல வாரிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை அலங்காநல்லூரில் வரும் 17ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய விலங்குகள் நலவாரிய ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு தலைவர் மிட்டல் தலைமையில், அலங்காநல்லூரில் ஜல்லக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் விலங்குகள் நலவாரியத்தினர் ஆய்வு மேற்கொண்டு […]
மதுரை காமராஜர்புரம் பகுதியில் 500 சவரன் நகை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பணம், நகை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்காக காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் இச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் மதுரை காமராஜர்புரத்தில் உள்ள தங்கவேலு என்பவரது வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிகப்பட்டுள்ளது. மேலும் இவரது வீட்டில் 500 சவரன் நகை மற்றும் ரூ.8 லட்சம் பணத்தையும் மர்ம நபர்களை கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பொங்கல் பரிசு தொகை ரூ.1000 தராததால் கணவர் மனைவியை வெட்டி கொன்றுள்ளார். மதுரை உசிலம்பட்டியில் அருகே பொங்கல் பரிசு தொகை ரூ.1000ல் ராஜாத்தியின் கணவர் பங்கு கேட்டுள்ளார். ராஜாத்தி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து, அவரது கணவர் ஆத்திரத்தில் ராஜாத்தியை வெட்டி கொலை செய்துள்ளார். ராஜாத்தியின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை – தூத்துக்குடி சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் 30% சுங்கக்கட்டணம் குறைத்ததற்க்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை – தூத்துக்குடி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், தனியார் பேருந்து உரிமமையாளர், சுங்க கட்டணம் முழுமையாக செலுத்தப்படுவதை குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளனர். இதனை விசாரித்த நீதிபதி அனைத்து வாகனங்களுக்கும் 30% சுங்க கட்டணத்தை குறைத்து வழங்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில், எளியார்ப்பத்தியில் உள்ள சுங்க சாவடி சார்பில், சுங்கக்கட்டணம் குறைப்புக்கு தடை விதிக்க கோரி […]
மதுரை வந்த அரசு பேருந்தில் பயணியிடம் 42 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் இருந்து நகை திருடப்பட்டுள்ளது. பயணியிடம் இருந்து 42 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். நகை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17ம் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியுள்ளது. மாடுபிடி வீரர்கள் உடல் தகுதியுடன், அவர்களது வயது 18 முதல் 40 வரை இருக்க வேண்டும். மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்ய 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து கோவிந்த ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், இன்று பிற்பகல் இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது.
அமராவதி ஆற்றில் செயல்படும் மணல் குவாரிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. கரூர் அருகே உள்ள மேலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குணசேகரன் என்பவர் மணல் குவாரியால் மக்களின் குடிநீர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கில் மக்களிடம் கருத்து கேட்காமல், மணல் குவாரி அமைக்கப்பட்டதாக கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.