பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, மற்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதன்பின், கல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் […]
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக பாஜக நிர்வாகிகள் மீது காங்கிரஸ் புகார். மதம் மாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தான் அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தமிழக பாஜக தலைவர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் வேண்டும் எனவும் தெரிவித்தனர். மாணவி தற்கொலைக்கு நீதி வேண்டும் என்பது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசி […]
கிண்டியில் 6.4 ஏக்கர் பரப்பளவில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் வேளாண்மைத்துறை பசுமை பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டம். சென்னை கிண்டியில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் வேளாண்மைத்துறை பசுமை பூங்கா அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கிண்டியில் 6.4 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பசுமை பூங்கா அமைக்கும் பணியை மார்ச் மாதம் பணிகளை முடிக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நறுமண தாவரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அமைக்கப்படவுள்ளன […]
பள்ளியிலும் மற்றும் ஊரிலும் மதமாற்ற முயற்சி இதுவரை நடந்ததில்லை என மைக்கேல்பட்டி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த அரியலூரை சார்ந்த பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம்தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மைக்கேல்பட்டி கிராம மக்கள் தஞ்சை மாவட்ட […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 3வது பட்டியலை மக்கள் வெளியிட்டார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன். இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் ஓசூர், […]
நீட் நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற 61 வயதான சிவப்பிரகாசம் மருத்துவ சீட்டை விட்டுக்கொடுத்தார். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து, தருமபுரியைச் சோ்ந்த 61 வயதான ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா் கே.சிவப்பிரகாசம் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், இன்று கலந்தாய்வில் பங்கேற்க […]
தமிழ்நாடு மின் வாரியம் , பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை சோதனை அடிப்படையில் அமல்படுகிறது. முதல்கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் மட்டுமே சோதனை முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை சோதனை அடிப்படையில் அமல் படுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது. மின் வாரியத்தின் பல்வேறு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து […]
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸால், அரசியல், சினிமா, பிரபலங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய பணியில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் நேற்று கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க, அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்துள்ளார். சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கரை கட்சியிலிருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் […]
வினோஜ் பி.செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், வினோஜ் பி.செல்வம் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில் பொய்யான தகவலை பரப்பும் வகையிலும், மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது. எனவே வினோஜ் பி.செல்வம் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை கேட்போம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் இடப்பங்கீடு குறித்து தீவிரம் காட்டி வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதற்கிடையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இடப்பங்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
நடிகர் விஜய் BMW எக்ஸ் 5 காருக்கு ரூ.30 லட்சத்து 23 ஆயிரம் வணிகவரித்துறை அபராதம் விதித்த நிலையில், இதனை எதிர்த்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தமிழ்நாடு வணிகவரித்துறை எந்த அடிப்படையில் இந்த அபராதம் விதித்தது உள்ளிட்ட தகவல்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. நடிகர் விஜய் அவர்கள் அமெரிக்காவில் இருந்து BMW எக்ஸ் 5 என்ற காரை இறக்குமதி செய்துள்ளார். 2005-ஆம் ஆண்டு இறக்குமதி செய்த இந்த காரின் மதிப்பானது ரூ.63 […]
மதத்தின் அடிப்படையில் பகைமை அல்லது பொது அமைதியை குலைப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை. சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக இளைஞரணி தலைவர் வினோத் பி.செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை மக்களிடையே பரப்பும் நோக்கில் கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும், இந்த பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையில் […]
தமிழக அரசு இரவு ஊரடங்கை ரத்து செய்ததை தொடர்ந்து, மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்களில் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முழு ஊரடங்கை ரத்து செய்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ இரயில் சேவைகள்: இன்று (28.01.2022) முதல் மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணி […]
வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும்வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் பிப்ரவரி 04-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் இட ஒதுக்கீடு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு , அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மேலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையும் பங்கேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, சற்று […]
சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், இன்று ஆலோசனை. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக இன்று ஆலோசனை […]
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீடு கீழ் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் நீட் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் மற்றும் 1,930 பி.டி.எஸ் உள்ளன. இந்த இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று […]
விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் , ல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து […]
வலுவான, பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்தும் நோக்கில்,தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இக்கொள்கையின் நோக்கம் என்னவென்றால், வலுவான, பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், குடிமக்களுக்கு ஏற்ற தொலைத்தொடர்பு தளங்களை கட்டமைப்புடன் ஏற்றுவது இக்கொள்கையின் நோக்கம் ஆகும். அதன்படி, மொபைல்ட்டவர் நிறுவினால் விண்ணப்பத்திற்கு ஒருமுறை திரும்ப பெறாத கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டும். அண்டர்கிரவுண்ட் டெலிகிராப் […]