காவிரி குண்டாறு திட்டத்துக்கு வரும் 21-ஆம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெறும் விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு […]
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் லோகரங்கன் என்பவர் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி […]
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2வது பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆளுநரிடம் அளித்தார். அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2வது பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் சென்னை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து அளித்துள்ளனர். அதிமுக அமைச்சர்கள் மீது தாங்கள் அளித்துள்ள ஊழல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 5 அமைச்சர்கள், […]
ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா வழக்கு தாக்கல் செய்தனர். அப்போது, நினைவு இல்லமாக மாற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், திறப்பு விழாவிற்கு தடை விதிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திறப்பு விழாவிற்கும், நினைவு […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனை https://www.tnusrbonline.org/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் https://www.tnusrbonline.org/pdfs/candidates_eligible.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு-கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி முடிவு செய்வார் என்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார். 11ம் வகுப்பு தேர்வு ரத்து குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வல்லுநர்களுடன் கல்வித்துறை ஆலோசித்து, முதல்வர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் […]
அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி சசிகலா ஓய்வில் இருக்கிறார். பிப் 24ஆம் தேதி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலுள்ள அம்மா திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை செலுத்துவார். அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம் […]
கோவை மேற்கு மண்டலத்தின் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், ஊழல், அராஜகம் செய்து மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று அமைச்சர் வேலுமணி நினைக்கிறாரா? என்று கூறி மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது கேவலமாக இல்லையா உங்களுக்கு என்று கூறியுள்ளார். இன்று அமைச்சர் பதிவில் உள்ளதால் அரசாங்க […]
புதுச்சேரியில் பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, நிச்சியம் வாக்களிக்க உள்ளதாக பாஜக நியமன எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளார்கள். புதுச்சேரியில் சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி 14 உறுப்பினர்களும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் 14 உறுப்பினர்களும் உள்ளதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் வலியுறுத்தி வந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்.22-ஆம் தேதி பெருபான்மையை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு உரிமை […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக வரும் 25-ம் தேதி மத்திய ஆயுதப்படை போலிசார் தமிழகம் வருகின்றனர். இந்த மாத இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக வருகின்ற 25-ம் தேதி தமிழகம் வரஉள்ளனர். முதற்கட்டமாக மத்திய ஆயுதப்படை 45 கம்பெனி பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழக வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
இந்தாண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் எம்.டெக் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு. எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூடேஷனல் டெக்னாலஜியில் ஆகிய 2 பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகிய வழக்கு தொடர்ந்தனர். அதில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் […]
கொரோனா வைரசுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. மத்திய அரசு அண்மையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து முதற்கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பரிசோதனையில் கலந்துகொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க […]
ஆளுநரை சந்தித்து மனு அளிக்க முயல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு, இன்று மாலை சென்னை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து, அதிமுக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்ததற்காக 2-ம் கட்ட புகார் பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது. கடந்த 22-ம் தேதி திமுக 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் […]
டீசல் விலை லிட்டர் ரூ.85 ஆக அதிகரித்துவிட்டதால் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை அடுத்து பார்சல் லாரி வாடகை கட்டணம் இன்று முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளது என உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.63 ஆக இருந்தபோது வசூலித்த லாரி வாடகையே தற்போது வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது லிட்டர் விலை ரூ.85 ஆக உயர்ந்துவிட்டதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை […]
தமிழகத்தில் ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் குளிர்சாதன வசதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைககளுக்கு ஏசி வசதியுடன் பேருந்துகள் இயங்கலாம் என தெரிவித்துள்ளனர். ஏசி பேருந்துகளில் 65 வயதான நபர்களை அனுமதிக்க […]
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மது போதையினால் குற்றங்கள் பெருகுவதும், குடும்பங்கள் சீரழிவதும் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. குடும்ப வன்முறை தொடங்கி காவல் அதிகாரிகளைத் தாக்குவது வரை சென்றுவிட்டது. மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்கிற வாக்குறுதிகள், கொடுத்தவருடனேயே மறைந்துவிட்டன. மதுவினால் ஏற்படும் தீமைகளைக் களைய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறது. கொரானா சமயத்தில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது […]
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள உதவிகளை பட்டியலிட்டு பேசினார். அப்போது, குடியுரிமை சட்டம் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பொதுமக்கள் மீதான தொடரப்பட்ட வழக்குகளும் […]
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு […]
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகையை சுற்றி போடப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கடந்த மாதம் போராட்டம் நடத்தப்பட்டது. அதேநேரம், பாஜக சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டதால், ஆளுநர் மாளிகை மற்றும் முக்கிய இடங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து, தற்போது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்து வந்த […]
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.25-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை காங்கிரஸ் கட்சினர் பெறலாம். பொதுத்தொகுதிக்கு ரூ.5,000, தனித்தொகுதி, மகளிர் தொகுதிக்கு ரூ.2,500 நன்கொடையாக தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்ப […]