ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் கோம் மாகாண போலீசார் இன்று தகவல் தெரிவித்ததாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அளித்த தகவலின்படி, சியோனிச ஆட்சியின் உளவு சேவைகளுடன் தொடர்புடையவர்கள், பொதுமக்களின் கருத்தை தொந்தரவு செய்தவர்கள் மற்றும் குற்றவியல் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இஸ்ரேலுக்காக […]
வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், ‘அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும்’என்று கோரியிருந்தார். தற்பொழுது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விஷயத்தில் தனது மௌனத்தை கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவில், ”இந்தியா – பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும். பல நாடுகள் இடையே […]
மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமைதி பரிந்துரைகளை முன்வைத்தார். ஆனால், இந்த முயற்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுதலித்து, “நான் மத்தியஸ்தம் செய்யும் பொறுப்பை விரும்பவில்லை” என்று கூறி, புடினுக்கு பகிரங்கமாக மறுப்பு தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் (ஜூன் 20, 2025) செய்தியாளர்களிடம் பேசிய புடின், இஸ்ரேல் மற்றும் […]
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள், இராணுவ தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. அதே நேரத்தில் ஈரான் இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய தளங்கள் மீது அதே வேகத்தில் ஏவுகணைகளை வீசி வருகிறது. முன்னதாக, இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பல மூத்த அதிகாரிகள் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் […]
ஈரான் : இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில் ஈரானே அதிக சேதங்களை சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை 639 பேர் பலியான நிலையில், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் இஸ்ரேலில் 24 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, இஸ்ரேலில் குடியிருப்பு பகுதிகளில், ஏவுகணைகளுக்குள் சிறிய ரக குண்டுகளை வைத்து ஈரான் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த குண்டுகள் […]
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக, இஸ்ரேலில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை நேற்று ஈரான் தாக்குதலில் பாதிக்கப்பட்டது. தற்பொழுது, பீர்ஷெபாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தை ஈரானிய ஏவுகணை தாக்கியதால், அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏவுகணை கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட் இஸ்ரேலிய இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை இஸ்ரேலிய […]
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய “தனிப்பட்ட செலவு” என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியது, இணையத்தில் கடுமையான விவாதத்தை தூண்டியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் ஆறு நாட்களை கடந்து நீடித்து வருகிறது. நேற்று ஜெருசலேம் பகுதியில் இரவு முழுவதும் ஈரானின் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதால் இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்தன. ஏவுகணைகள் அனைத்தும் இஸ்ரேலை குறி வைத்து […]
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியை சந்திக்காமல் மாநாட்டின் பாதியிலேயே டிரம்ப் வெளியேறினார். மோடியை சந்திக்காத டிரம்ப், பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கிறது என்று குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் உடன் உணவு சாப்பிட நேரம் கொடுத்துள்ளார். இந்த சந்திப்பு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் டிரம்ப் உடனான விருந்துக்கு […]
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘SpaceX’ நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு அருகிலுள்ள நிறுவனத்தின் ஸ்டார்பேஸ் வசதியில் அதன் பத்தாவது ராக்கெட்சோதனையின் போது, வெடித்துச் சிதறிய ‘ஸ்டார் ஷிப் 36’ ராக்கெட்டால் பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஸ்பேஸ் எக்ஸ் விளக்கம் அளித்துள்ளது. மேலும், அந்த ராக்கெட் வெடித்து சிதறிய போது, சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சிறிய அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், ஆனால் […]
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு தலைவர் கொமேனி உத்தரவிட்டதை தொடர்ந்து, ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது இடைவிடாது தாக்குதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக, ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது. ஈரானின் அணு ஆயுதங்கள் மற்றும் […]
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான “பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்” திரைப்படத்தில் வரும் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் உடையணிந்து, மருத்துவமனையில் உள்ள குழந்தைகளை ஆச்சரியப்படுத்தி மகிழ்வித்துள்ளார். ஆம்.., 62 வயதான நடிகர் ஜானி டெப், கடந்த ஜூன் 16ம் தேதி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் உள்ள நினோ ஜெசஸ் பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனைக்கு தனது பிரபலமான கேப்டன் ஜாக் ஸ்பாரோ கெட்அப்பை அணிந்து சென்று அங்கிருந்த குழந்தைகளை மகிழ்வித்தார். Johnny […]
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம் குறையாமல் இருக்கிறது. இந்த போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலை ஆதரிக்க அமெரிக்கா நேரடியாக களமிறங்குமா? என்ற கேள்வி உலக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழு ஆதரவு அளிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்தாலும், அமெரிக்காவின் இராணுவ நகர்வுகள் மற்றும் டிரம்பின் […]
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும் கோண்டாப் (Khondab) நகரங்களில் புதிய தாக்குதல்களைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இந்த நகரங்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக பகுதியை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தது. “அராக் மற்றும் கோண்டாப் நகரங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள குடிமக்கள், உங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். அடுத்த சில மணி நேரங்களில், […]
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tehran University of Medical Sciences) மருத்துவ மாணவர்கள் விடுதி இலக்காகி, அதில் தங்கியிருந்த ஐந்து இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஈரான் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூன் 13, 2025 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதலின் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ தாக்குதலில் ஈரானின் அணு ஆயுத […]
ஈரான் : ஈரான் – இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர்கள் சிலர் காயமடைந்ததை ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் உறுதிப்படுத்தியது. தெஹ்ரானின் கேஷாவர்ஸ் தெருவில் உள்ள மருத்துவ மாணவர்களின் விடுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆம், டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகம், இஸ்ரேல் தாக்குதலில் 5 இந்திய […]
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக அறிக்கையின்படி, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இணைவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாகதகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 6வது நாள் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 வீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக […]
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை தாக்கும் என அஞ்சப்படுவதால், போர் இன்னும் தீவிரமடையும் நிலையில், மக்கள் தான் பாதிக்கப்பட உள்ளனர். ஈரானில் தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்கும் நிலையில் கமேனி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘ஈரான் உடனடியாக சரணடைய வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவுறுத்திய நிலையில் ஈரானிய தலைவர் ஆயத்துல்லா காமேனி பதிலடி கொடுத்துள்ளார். நேற்றைய தினம், […]
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் முக்கியமான தனியார் விண்வெளி பயணமாகும். இந்த திட்டம், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் ஏற்கனவே ஜூன் 19, 2025 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஜூன் 22, 2025 (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி மதியம் 1:12 மணிக்கு (1:12 PM IST) ஸ்பேஸ்எக்ஸ்-இன் பால்கன் 9 ராக்கெட்டில் […]
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படியான சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் மிகப் பெரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்றுவிட்டால் , இந்த மோதல் முழுவதும் முடிந்துவிடும் என்று அவர் கூறியிருந்தார். அவரை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயை குறிவைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்து, […]
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று ஜி7 நாடுகளின் தலைவர்கள் (அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான்) ஒருமித்த கருத்தை வெளியிட்டனர். இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உள்ளதாகவும், ஈரான் மத்திய கிழக்கில் பிராந்திய அமைதியின்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இந்த மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக […]