ட்விட்டரில் இருந்து ஓய்வெடுக்கப்போவதாக அறிவித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.!

sivakarthikeyan

ட்விட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளமான தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காரணத்தை தெரிவிக்கலாமல், ட்விட்டரில் இருந்து சிறிது நேரம் இருப்பேன், ஆனால் ‘விரைவில் திரும்பி வருவேன்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், எனது படங்கள் பற்றிய அனைத்து அப்டேட்களையும் எனது குழு பகிர்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனை கண்ட அவரது ரசிகர்கள் சிறுது சோகத்தில் உள்ளனர் என்றே சொல்ல வேண்டும். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த வருடத்தில் இவருக்கு இரண்டு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது.  அதாவது, இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாவீரன் படமும் இந்த ஆண்டு வெளியாகும் எனப்து குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்