நடிகர் சுந்தர் சி க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரது மனைவி மாற்றும் நடிகையான குஷ்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனருமான சுந்தர் சிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அவரது மனைவி மாற்றும் நடிகையான குஷ்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பது ” எனது கணவர் சுந்தர் சி க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நன்றாக இருக்கிறார். தயவு செய்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சுந்தர் சி விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றும் கூறியுள்ளார்.
unknown node