கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகை கங்கனா ரனாவத்..!!

Actress Kangana Ranaut has recovered from Corona, according to her Instagram page.

கொரோனாவில் இருந்து நடிகை கங்கனா ரனாவத் குணமடைந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகையான கங்கனா ரணாவத்துக்கு கடந்த 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து கொரோனா தொற்றிலிருந்து தான் மீண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதில் ” பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்று வந்துள்ளது. கொரோனாவை  எப்படி வீழ்த்தினேன் என்பது பற்றி சொல்ல நிறைய உள்ளது. ஆனால் கொரோனா ரசிகர் மன்றங்களை புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். வைரஸை மரியாதை குறைவாகப் பேசினால் சிலர் புண்படுகிறார்கள். அனைவருடைய .அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்