சந்திராயன் விழுந்தாலும் விதையாக தான் விழுந்தது : ஹிப்ஹாப் ஆதி

ஹிப்ஹாப் ஆதி தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளரும் நடிகருமாவார். இவர் ஆம்பள திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நட்பே துணை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது. இதனால் சிவன் அய்யா அவர்கள் கண்ணீர்விட்டு அழுகின்ற காட்சிகள் கல் மனதையும் கசிந்துருக செய்தது.
இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், விஞ்ஞானத்தில் வெற்றி தோல்விகளை விட முயற்சிகளே முக்கியம். சந்திராயன் விழுந்தாலும் விதையாக தான் விழுந்தது. உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறோம் சிவன் அய்யா என்று உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025