லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு.!

lyca productions

சென்னையில் லைகா நிறுவனத்தின் பெரும்பாலான இடங்களில், அமலாக்கத்துறை நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றது.

வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனையில் லைகா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக வந்த புகாரை அடுத்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் நேற்று  முதல் சோதனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னையில் லைகாவுக்கு சொந்தமான இடங்கள் அமைந்துள்ள தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்