dhoni cameo role goat movie [file image]
சென்னை : விஜய் நடித்துள்ள கோட் படத்தில் தோனி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்க வாய்ப்புள்ளதாக பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை படக்குழு ஆக 17-ஆம் தேதி வெளியிட்டது. டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம்.
டிரைலரில் இடம்பெற்றிருந்த பல காட்சிகளில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய சென்னை அணியின் வீரருமான, தோனி பற்றிய சில குறியீடுகள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு ‘definitely not’ என்று தோனி பதில் கூறியிருப்பார்.
‘definitely not’ என்ற வார்த்தை அச்சிடப்பட்ட சென்னை அணியின் ஜெர்சியை விஜய் அணிந்திருப்பார். அதைப்போல, எவ்வளவு வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்ற வசனமும் தோனிக்காக வைக்கப்பட்டது போல இருந்தது. இந்த சூழலில், ஏற்கனவே, கோட் படத்தில் தோனியும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், பிக் பாஸ் பிரபலமும், சினிமா விமர்சகருமான அபிஷேக் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார்.
இது பற்றிப் பேசிய அவர் ” கோட் படத்தில் தோனி இருக்கலாம்…அதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அவரை போலப் பலர் இருப்பதைத் தாண்டி வெளியே சொல்ல முடியாத பல சர்ப்ரைஸ் படத்தில் இருக்கிறது” எனக் கூறி கோட் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அபிஷேக் ” வெங்கட் பிரபு கோட் படத்தினை முடித்த பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் செய்யவுள்ளார்” எனவும் தெரிவித்தார். இருவரும் இணையும் படம் சில காரணங்களை ட்ராப் செய்யப்படுவதாகத் தகவல்கள் பரவிக் கொண்டு இருந்த நிலையில், அபிஷேக் கூறியுள்ளது மூலம் அதற்கும் விளக்கம் கிடைத்துள்ளது.
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…