இயக்குனர் செல்வராகவனின் மூன்றாவது குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார். தற்போது தனுஷின் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவர் 2 பாகத்தை இயக்கவுள்ளார். அதற்கு முன்பு இவர் ஹீரோவாக சாணிக் காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இயக்குனர் செல்வராகவனிற்கு பெண் குழந்தை பிறந்தது. 2 மாதங்கள் ஆகியும் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த செல்வராகவன் தற்போது தனது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அதில் தனது மூன்றாவது குழந்தையின் புகைப்படமும் உள்ளது அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
unknown node