இந்தி பேசாதீங்க…தமிழில் பேசுங்க…மனைவிக்கு கட்டளை போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.!!

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மொழியை விட்டுக்கொடுக்காமல் பல இடங்களில் பெருமையாக பேசுவார். அதைப்போல தமிழில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடந்தால் கூட அங்கு ஹந்தியில் பேசினால் தமிழில் பேச கூறுவார். அந்த அளவிற்கு தமிழ் மீது தீராத பற்றுக்கொண்டவர் இவர்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தனது மனைவி சாய்ரா பானுயுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. மேடையில் விருது வாங்கிய ரஹ்மான் தொகுப்பாளரிடம் பேசி கொண்டிருந்தபோது, அவரது மனைவி சாய்ரா பானுவை மேடைக்கு பேச வரும்படி அழைத்தனர்.
இதனைதொடர்ந்து, மேடைக்கு வந்த ரஹ்மான் மனைவி முதலில் இந்தியில் பேசினார். அப்போது அவரை
இடைமறித்த ஏ.ஆர் .ரஹ்மான் இந்தி வேணாம்..தமிழில் பேசு என செல்லக்கட்டளை இட்டார். அவர் அப்படி கூறியதும் கூட்டத்தில் பலத்த கோஷம் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025