தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
இதற்கிடையில், பீஸ்ட் படத்தில் செல்வராகவன் தேர்வு செய்தது குறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் “தற்போது செல்வராகவன் சார் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதை கேள்விபட்டவுடன் தான் பீஸ்ட் படத்தில் அவரைத் தேர்வு செய்தோம். அவர் படங்களில் நடிக்காமல் இருந்திருந்தால் நேரில் சென்று எனக்கு கேட்கக்கூட தைரியம் வந்திருக்காது.
அவரை வைத்து பத்து நாள் தான் படப்பிடிப்பு நடத்தினோம் . ஆனால் அவர் படம் முழுவதும் வருவார் ஒரு வார்த்தைக்கூட படப்பிடிப்பின் போது பேச மாட்டார். அவர் மிகப்பெரிய இயக்குனர். ஆனால் அந்த சிந்தனையே அவருக்கு இருக்காது. நடிக்க ஆரம்பித்துவிட்டால் நடிகராகதான் இருப்பார்.
ஒரு சீனை குறைக்கலாம் , மாற்றலாம், என்று எதுவுமே சொல்ல மாட்டார். அவருடைய கதாபாத்திரமும் படத்தில் அருமையாக இருக்கும்விஜய் சாரும் செல்வா சார் கதாபாத்திரம் நல்லா இருக்கு என்று கூறினார்.” என நெல்சன் தெரிவித்துள்ளார்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…