Karthick : நவரச நாயகன் பட்டமே வேண்டாம் என சொன்ன கார்த்திக்! காரணம் என்ன தெரியுமா?

கடந்த 1981-ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். இவர் தான் நடித்த முதல் படத்தையே தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தை பெற்று கொண்டார். இந்த திரைப்படத்திற்கு பிறகு நேரம் வந்தாச்சு, தாய் மூகாம்பிகை, நினைவெல்லாம் நித்யா, பக்கத்து வீட்டு ரோஜா, உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.
தொடர்ச்சியா இவர் நடித்த படங்களும் ஹிட் ஆக ரஜினி கமல்ஹாசன் ஒரு காலகட்டத்தில் வளர்ந்து வந்துகொண்டிருந்த சமயத்தில் கார்த்தியும் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருந்தார். அந்த சமயம் தொடர்ச்சியா காதல் கதையை தேர்வு செய்து நடித்து வந்த காரணத்தால் இவருக்கு பெண் ரசிகைகளும் அதிகமானார்கள் என்றே கூறலாம்.
ரஜினிகாந்திற்கு சூப்பர் ஸ்டார், கமல்ஹாசனுக்கு உலகநாயகன் என் மக்கள் பாசத்துடன் பட்டம் கொடுத்த நிலையில், கார்த்திக்குக்கு நவரசநாயகன் என்ற பட்டத்தை மக்கள் கொடுத்தார்கள். அவருக்கு இந்த பட்டம் கொடுத்ததில் இருந்து அவர் நடிக்கும் படங்களில் நவரச நாயகன் என்று தான் டைட்டில் வைக்கப்பட்டு வரும். ஆனால், மக்கள் பாசத்துடன் கொடுத்த இந்த பட்டத்தை வேண்டாம் என்று கார்த்திக் ஒரு கட்டத்தில் முடிவெடுத்துள்ளார்.
முதன் முதலாக கார்த்திக்குக்கு நவரச நாயகன் என்று படத்தில் தலைப்பு வைக்கும்போது கார்த்திக் வேண்டாம் என மறுத்துவிட்டாராம். நவரச நாயகன் கார்த்திக் நடிக்கும் என படத்தின் போஸ்டரில் பெயர் இடம்பெற்றிருந்தது பார்த்தவுடன் அதிர்ச்சியும் வெட்கமும் கார்த்திக்குக்கு வந்துவிட்டதாம். பிறகு படத்தின் தயாரிப்பாளரை கார்த்திக் தனியாக அழைத்து சென்றுநான் என்ன கிழிச்சேன்னு நவரச நாயகன் பட்டம் ? என கேட்டாராம்.
அதற்கு அந்த தயாரிப்பாளர் என் இந்த பட்டம் உங்களுக்கு சரியாக தான் இருக்கும் உங்களுக்கு என்ன குறைச்சல் என கேட்டாராம். பிறகு கார்த்திக்கும் ஒன்னும் சொல்லாமல் இந்த மாதிரி தன்னுடைய பெயரில் நவரச நாயகன் டைட்டிலுடன் படம் இறங்குவதால் கார்த்தி அந்த சமயம் சற்று பயந்துள்ளார். பிறகு அந்த படமும் வெற்றிபெற அடுத்ததாக அவர் நடிக்கும் படங்களில் நவரச நாயகன் என்று டைட்டில் அப்டியே வைக்கப்பட்டுவிட்டதாம்.
தனக்கு நவரச நாயகன் பட்டமே வேண்டாம் சொன்ன இந்த தகவலை கார்த்திக்கே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த படத்தில் இருந்து அந்த டைட்டில் வைக்கப்பட்டது என்ற அந்த படத்தின் பெயரை கூற மறுத்துவிட்டார். அந்த சமயமே தனக்கு பட்டம் வேண்டாம் என்று கூறிய கார்த்திக்கு மிகப்பெரிய மனசு தான் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
மேலும், நடிகர் கார்த்திக் இன்று (செப்டம்பர் 13) தன்னுடைய 63-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கடைசியாக கார்த்திக் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரு.சந்திரமௌலி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அந்தகன் எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.