தனுஷுடன் ஒரு திரைப்படம் எடுப்பிங்களா என்ற கேள்விக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதில் அளித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படத்திலும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
unknown nodeஇதற்கிடையில், கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில விஷியங்களை பகிர்ந்துள்ளார். அப்போது அவரிடம் தனுஷுடன் இன்னொரு படம் பண்ணுவீங்களா..? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
unknown nodeஅதற்கு பதிலளித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ” கண்டிப்பாக நானும் தனுஷ் சாரும் ஒரு படம் பண்ணலாம்-னு தான் பேசிக்கொண்டிருந்தோம்.. ஆனால் அது எப்போது தான் தெரியவில்லை, ஏனென்றால் அவரும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்…நானும் படம் பணிகொண்டிருக்கிறேன்.. நிச்சியமாக விரைவில்.. என கூறியுள்ளார்.
unknown nodeஇதற்கு முன்பு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் – தனுஷ் கூட்டணியில் கடந்த ஜூன் மாதம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.