பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரியோ தற்போது தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காட்டு பகுதிக்கு டிரக்கிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்கள் வரை இருந்து இறுதிக்கட்டத்தில் வெளியான போட்டியாளர் தான் நடிகர் ரியோ ராஜ் .இவர் இறுதிகட்டத்தின் போது வெளியே சென்றதும் என்ன செய்ய உள்ளீர்கள் என்று கமல்ஹாசன் கேட்டதற்கு வண்டியை எடுத்து கொண்டு ஒரு காட்டு பகுதிக்கு டிரக்கிங் செல்ல உள்ள உள்ளதாக கூறியிருந்தார் .
அதற்கு ஏற்றவாறு கமல் அவர்களும் டிரக்கிங் செல்லும் போது உதவும் வகையில் டெண்ட் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.இந்த நிலையில் தற்போது தான் சொன்னதை நிறைவேற்றி உள்ளார் ரியோ .தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு எடுத்து கொண்ட தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களுடன் ,தனது ஏஞ்சலுடன் நிற்கும் கியூட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் . தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
View this post on Instagram