தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலில் கமர்சியல் படம் எடுப்பதில் வல்லவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் அடுத்ததாக சிம்புவை வைத்து மாநாடு எனும் படத்தை எடுக்க உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
unknown nodeஇந்த படத்திற்காக சிம்பு, வெளிநாட்டிற்கு சென்று உடல் எடையை குறைத்திருந்தார். மார்ஷல் ஆர்ட்ஸ் எல்லாம் கற்றுக்கொண்டு திரும்பினார். பின்னர் ஹன்சிகாவின் 50வது படம், ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் புதிய படம் என பிஸியானதால் இப்படம் தள்ளிப்போய் கொண்டே வந்தது.
தற்போது இப்படம் டிராப் ஆனது என பட தயாரிப்பாளரும், இயக்குனரும் டிவிட்டரில் அறிவித்து விட்டனர். இதற்க்கு காரணமாக ஒரு சில காரணங்களால், பண பிரச்சனை என காரணங்கள் முன்வைக்கப்பட்டு படம் ட்ராப் என அறிவிக்கப்பட்டுவிட்டது.