நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கும்பகோணத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
இன்று பங்குனி உத்திரம் தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை நயன்தாராவும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் கும்பகோணத்தில் உள்ள அவர்களுடைய குலதெய்வகோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தனர்.
unknown nodeTrichy Airport [Image Source : Twitter]
குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புகைப்படங்களும், குலதெய்வ கோவிலில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown nodeNayanthara [Image Source : Twitter]
இதற்கிடையில், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுடைய இரண்டு குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன்,உலக் தெய்விக் N சிவன் என பெயர் வைத்திருந்ததாக அறிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.