காதலர் தினத்தை கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இன்று காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். தனக்கு பிடித்தவர்களை வெளியில் அழைத்து சென்று சிலர் அன்பை பரிமாறிக்கொண்டு வருகிறார்கள். மேலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த வருடம் காதலர் தினம் அந்த அளவிற்கு கொண்டாடபடவில்லை, இந்த வரும் கொரோனா தொற்று குறைந்ததால் மிக சிறப்பாக காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ” ஆண்டில் ஒருநாள் காதலை மதிப்பது மேனாட்டார் பழக்கம். வாழ்வே காதலாய் வாழ்ந்து கழிவதே நம்நாட்டார் வழக்கம்.காதலொன்றில்லாத நாளுண்டா நமக்கு? காதலர்தினம் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node