ரீமேக் படமொன்றில் துப்பறியும் நிபுணராக நடிக்கும் சந்தானம்.!

Santhanam is said to be set to play a detective in the Tamil remake of the Telugu film "Agent Sai Seenivasa Atreya".

“ஏஜன்ட் சாய் சீனிவச அத்ரேயா” என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் துப்பறியும் நிபுணராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம்.பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது பாரிஸ் ஜெயராஜ்,டிக்கிலோனா ,சபாபதி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது சந்தானம் ஒரு தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்”ஏஜன்ட் சாய் சீனிவச அத்ரேயா” தெலுங்கில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.அதில் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும், மேலும் இந்த படத்தில் துப்பறியும் நிபுணராக சந்தானம் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கூறப்படுகிறது.நகைச்சுவை கலந்த திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தினை மனோஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.இவர் வஞ்சகர் உலகம் என்ற படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.