விஜய்-க்கு வச்சிருந்த கதையை அஜித்துக்கு பண்ணிட்டேன்.! அடுத்தடுத்த மிஸ் செய்த சுந்தர் சி...

Sundar c: விஜய்க்காக எழுதிய கதையில்அஜித் நடித்தது குறித்த ஸ்வாரசியமான தகவலை இயக்குனர் சுந்தர் சி பகிர்ந்துள்ளார்.

vijay - sundar c

Sundarc: விஜய்க்காக எழுதிய கதையில்அஜித் நடித்தது குறித்த ஸ்வாரசியமான தகவலை இயக்குனர் சுந்தர் சி பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

காமெடி கலந்த திகில் திரைப்படமான இதில், தமன்னா, ராஷி கன்னா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக, இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சுந்தர் சி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்க வந்து இருந்தார்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில், “விஜய் வைத்து படம் எடுத்த பிறகு பலமுறை ஆசைப்பட்டு இருக்கிறார். இயக்குனர் சுந்தர் சி ‘உன்னை தேடி’ என்கிற திரைப்படத்தின் கதையை அப்போது எழுதி வைத்திருந்தார்.

விஜயிடம் அந்த கதையை சொல்லியுள்ளார், ஆனால் அந்த கதையில் அவர் நடிக்க வில்லையாம். பின்னர், அந்த கதையில் நடிக்க, நடிகர் அஜித் விருப்பம் தெரிவித்ததால், உன்னை தேடி படத்தில் அஜித் நடித்திருப்பார்.

சுந்தர் சியை பொறுத்தவரை தனக்கு கதை சொல்வதற்கே அவ்வளவாக வராது என கூறிஉள்ளார். அதேபோல்,விஜய்யிம் ஒரு பழக்கம் உண்டு ஒரு வழக்கத்தை முழுமையாக கேட்டு விட்டு தான் அதனை நடிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வார்” என கூறினார்.

இதையடுத்து, “சமீபத்தில் ஒரு கதை சொன்னேன், அது இடைவேளை வரை அவருக்கு பிடித்தது, 2வது பாதி பிடிக்கவில்லை. ஆனால் அவருடைய முடிவதான் சரியாக இருந்தது. இதே கதையை படமாக எடுத்து ஜெயித்து காட்டுகிறேன் என எடுத்தேன். இறுதியில்  படம் ஊற்றிக்கொண்டது. அது என்ன படம் எனச் சொல்ல மாட்டேன், சொன்னால் அதில் நடித்தவரின் மனம் புண்படும்” என்று கூறினார்.

விஜய்-க்கு வச்சிருந்த கதையை அஜித்துக்கு பண்ணிட்டேன்.! அடுத்தடுத்த மிஸ் செய்த சுந்தர் சி...