காவல்துறையினரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல நடிகர்!

காவல்துறையினரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய நடிகர் சூரி.
கொரோனா வைரஸின் தீவிர பரவலால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் தான் மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களை காக்கும் பணியில், காவல்துறை அதிகாரிகள் மிக தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சூரி திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு நேரில் சென்று, காவல்துறை அதிகாரிகளை பாராட்டி, அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025