வெளியான முதல் வாரத்தில் "நெஞ்சம் மறப்பதில்லை" வசூல் இத்தனை கோடியா..??

The film has grossed Rs 6.50 crore worldwide in its first week.

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 6.50 கோடி வசூல் செய்துள்ளது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா , நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த நிலையில், இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், வெளியான முதல் வாரத்தில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 6.50 கோடி வசூல் செய்துள்ளது.